29 ஏப்ரல் 2014

கழுகும் கிளியும்

ஒரு காட்டில் இருந்த வயதான கழுகிற்கு ஒரே பசி.

காட்டில் ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அங்கு காடே இல்லை. 

மனம் போன போக்கில் பறந்த கழுகு கடைசியில் ஒரு மலையுச்சியை அடைந்தது.

மலையுச்சியில் ஒரு சிறிய குகை. 

குகை வாசலில் பசியோடு சென்று விழுந்த கழுகு, நிமிர்ந்து பார்த்தது.

27 ஏப்ரல் 2014

மாயமான் வேட்டை

வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.

அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.

அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.

நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.

25 ஏப்ரல் 2014

கதை, வெறும் கதை

இரவு ஏழு மணி

வெளிச்சமில்லா சாலையில் சைக்கிளில் போய் கொண்டிருந்தவன் மீது வேகமாக மோதியது ஒரு மோட்டார் சைக்கிள்

பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி விழுந்தான்.

எட்டு மணி

இறந்து போனான்

ஒன்பது மணி

யாரோ ஒருவன் அவனை பார்க்காமலேயே கடந்து சென்றான்

23 ஏப்ரல் 2014

வெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி

"உயிர்த் துடிப்பான பாத்திரங்களை படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்பு பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி, பக்கங்களை புரட்டும் போதே கை விரல்களில் தீப்பற்றிக் கொள்கின்றது" என்று பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்ததை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. அப்படிப்பட்ட புத்தகத்தை சர்வசாதரணமாக பல புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தனர். உடனே அதை கைப்பற்றி கடையை காப்பாற்றி விட்டேன்.  படிக்கும் போது எந்த ஆபத்தும் வரவில்லை, என் பெண் கூட அதை வைத்து விளையாடுகின்றாள். படித்த பின்னர் அது கிழக்கு பதிப்பகத்தின் அவதூறு என்று அறிந்து கொண்டேன்.

கொஞ்சம் முன்கதை,

கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தான். அப்போது என்னிடம் இருந்த வசதிக்கு கொஞ்சம் கல்கி புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அதை பார்த்த அவனுக்கு சந்தோஷம். கண்டேன் புத்தகப்புழுவை என்று. எனக்கும் சந்தோஷம். கொஞ்ச நாளைக்குதான். அவன் படிக்கும் புத்தகங்கள் பாலகுமாரனும், ஜெயகாந்தனும். நல்லவேளையாக பாலகுமாரனை அப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்த முதல் ஜெயகாந்தனின் புத்தகமே ரிஷிமூலமாக போனது எனது துரதிர்ஷ்டம். புத்தகத்தை பதுக்கி வைத்து திரும்ப தந்துவிட்டேன். என்னிடம் இருந்து அவன் சில கல்கி புத்தகங்களை வாங்கி சென்றான். திரும்ப தரும் போது "என்னடா உங்க ஆள் (!!) கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா? அவன் வாங்கி சென்ற புத்தகங்களை ஆராய்ச்சி செய்த போது ஒரு அரிய உண்மை புலப்பட்டது. அன்னார் கூறியது சரிதான், ஆனால் அது "ஒற்றை ரோஜா" கதையில் வரும் சம்பவம், பாத்திரமே கதை சொல்லும் படி எழுதப்பட்டது. அதை படித்துவிட்டு குழம்பிய அவனுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்பது தெரியவில்லை. (இதை படிக்கும் துரதிஷ்டம் அவனுக்கு வாய்த்தால் அவனுக்கு : இப்போதாவது அது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்)

15 ஏப்ரல் 2014

புதுவரவு

வீட்டிற்கு ஒரு புது வரவு.

ஆண் குழந்தை. வெள்ளிக்கிழமை காலை. தாயும் சேயும் நலம்.

பத்து பதினைந்து நாட்களுக்கு இங்கு லீவு, "யார் கேட்டார்கள்" என்றாலும், கடைக்கு லீவு விடும் போது சொல்வது கடமையல்லவா? 

08 ஏப்ரல் 2014

அபிதா - லா. ச. ரா

பின்னட்டையில் இருக்கும் அந்த தாத்தாவின் முறைப்பை பார்த்துவிட்டு யோசித்தேன் வாங்கலாமா வேண்டாமா என்று. ஆனால் அடிக்கடி இவர் பெயரை சுஜாதா கதைகளில் படித்ததால் சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கி வைத்தேன். படிக்கவில்லை. போன வாரம்தான் வீட்டிலிருந்த புத்தகங்களை ஆராய்ச்சி செய்தேன், வாங்கி படிக்காமல் வைத்திருப்பது, கொஞ்சம் படித்து விட்டு வைத்தது, அவசரத்தில் படித்தது எல்லாம் எடுத்து வைத்திருக்கின்றேன். 

முதலில் இதுதான் கண்ணில் பட்டது. ஒரு முறை படித்துவிட்டு முடியாமல் வைத்து விட்டேன். அதோடு வாசகர்கூடத்தில் வேறு இதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

பலரால் பாராட்டப்படும் இவரது புத்தகம் என்னை கவரவில்லை. கவித்துவமான நடை என்கின்றார்கள். எனக்கு கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை சேர்ந்த நடை என்றால் அவ்வளவுதான். 

05 ஏப்ரல் 2014

நான் நாகேஷ்

நாகேஷ்.

நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.

நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்‌ஷன் செல்லப்பாவும்தான்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டுதான் புத்தகத்தை படித்தேன். படிக்கும் போது சிவாஜி, பத்மினி உருவங்கள் எல்லாம் மறைந்து, என் கற்பனை உருவமே கதை முழுக்க நிறைந்தது. ஆனால் வைத்தியை பற்றி படிக்கும் போது நாகேஷ்தான் என் கண்ணில் தெரிந்தார். இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார்.

01 ஏப்ரல் 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகனின் முதல் நாவல். அகிலன் நினைவு பரிசு பெற்ற நாவல்.

மனிதன் எங்கெல்லாம் தன் காலடியை வைத்தானோ அங்கெல்லாம் தான் காலடி வைத்த இடத்தை அழித்து நாசமாக்கிவிடுவது வழக்கம். மனிதனின் தேவையும் ஆசையும் அவ்வளவு பெரியது. இயற்கையை அளித்து உண்டாக்கிய பல விஷயங்களில் முக்கியமானவை காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள்.

உலகில் அதிக ரப்பர் உற்பத்தி செய்யும் நாட்டில் நமது நாடும் ஒன்று. முக்கிய இடம் கேரளா. ரப்பர் உற்பத்தி என்பது ஒரு வகையில் வளர்ச்சி என்றாலும் அந்த வளர்ச்சி உருவானது காடுகளை அழித்து. ரப்பரும் ஒரு வகை மரம்தானே என்றாலும், அது நம் நாட்டிற்கேற்ற மரமல்ல. அது உறிஞ்சும் தண்ணீர் மிக அதிகம். இரண்டாவது மனிதர் காலடி படாத இடத்தில் மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு சுதந்திரம் இருக்கும். மனிதன் வந்துவிட்டால அவனுக்கு போகத்தான் மற்ற உயிர்களுக்கு. மனித நடமாட்டம் மிகுந்த பல இடங்களிலிருந்து மற்ற மிருகங்கள் வெளியேறி ஓடுகின்றன. இதனை பிண்ணனியாக வைத்து எழுதப்பட கதை ரப்பர். இரப்பர் என்று எழுத வேண்டும் என்பார்கள், இரப்பர் என்றால பிச்சைக்காரர்கள் என்றாகி குழப்பமாகிவிடும். எனவே ரப்பர்தான்