30 அக்டோபர் 2012

வாடிவாசல் - சி. சு. செல்லப்பா

"மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையை கண்டு விட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிவதை சாதகமாக செய்திருகின்றார்கள். அந்தக் கோதாவுக்குள் ஒத்தைக்கு ஒத்தையாக இறங்கும் மனுஷனுக்கும் மாட்டுக்கும் நடக்கிறப் பலப் போட்டியில் இந்த இரண்டிலொரு முடிவு காணும் - அந்த வாடிவாசலில்"
 
அந்த முடிவை காண வரும் இரண்டு இளைஞர்களை மையமாக கொண்டது இக்கதை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு. காளைகளுக்கு அது விளையாட்டல்ல, மாடு அணைபவர்களுக்கும் அது விளையாட்டல்ல.

26 அக்டோபர் 2012

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா

சுஜாதாவைப் பற்றி அறிமுகம் செய்ய முனைந்தால் அது என் அறியாமையைக் காட்டும். அனைவருக்கும் தெரிந்த பிடித்த எழுத்தாளர். அவரைக் குறை சொல்பவர்கள் கூட அவரை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர் கணையாழியில் 33 வருடங்களாக எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு கணையாழின் கடைசிப் பக்கங்கள் என்று ஒரே தொகுப்பாக உயிர்மை வெளியுட்டுள்ளது.

சுஜாதா கணையாழியில் தொடர்ச்சியாக எழுதவில்லை, விட்டு விட்டு வேறு வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். தேசிகன் இதை பெரும் சிரந்தை எடுத்து தொகுத்துள்ளார். அனைத்து கட்டுரைகளும் மாதவாரியாக தொகுத்துள்ளனர். படிக்கும் போது அந்த காலத்தைப் பற்றிய ஒரு சித்திரமும் கிடைக்கின்றது.உண்மையில் இதைச் செய்து முடிக்க அசாத்ய பொறுமை வேண்டும். தேசிகனிடம் வேண்டியளவு இருக்கின்றது.

19 அக்டோபர் 2012

ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்


நடுத்தரவர்க்கம் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. தன்னை விட மேலாக உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதும், தன்னைவிட கீழே உள்ளவர்களைப் பார்த்து தன்னை திருப்திப் படுத்திக் கொள்வதுமாக அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது. தவறு செய்யப் பயப்படுவதும், அதே சமயம் தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு நடுவில் இருப்பதும், செய்த தவறை நினைத்து தவிப்பதும், ஆசைக்கும் நேர்மைக்கும் நடுவில் வாழும் ஒரு வாழ்க்கை.

16 அக்டோபர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள்

வழக்கமாக புத்தகங்களைப் படித்தால், நமக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். அவர்களும் அதை வாங்கிப் படிக்கட்டும் என்ற நல்ல எண்ணம். சில புத்தகங்களைப் படித்தால், மற்றவர்களுக்கு எச்சரிக்கத் தோன்றும்.
 

15 அக்டோபர் 2012

கரைந்த நிழல்கள்

"சினிமான்னா என்னாங்க  காரு சோறு இது இரண்டும் தானுங்களே. புரொடக்ஷன் நடக்கற வரைக்கும் அஞ்சு ரூபா பத்து ரூபா சாப்பாட்டுக்குக் குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிடமாட்டான். பத்து பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்" என்று முடியும் இக்கதை சினிமாத்துறையினரின் கதையை இரண்டு வரியில் சொல்கின்றது.

08 அக்டோபர் 2012

ஜனகணமன - மாலன்

காந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப்  பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

இது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான சாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர். 

02 அக்டோபர் 2012

ஒற்றன் - அசோகமித்திரன்

18வது அட்சக்கோடு படித்ததும் அசோகமித்ரனின் நூல்களை வாங்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவர்கள் ஒற்றனைப் பற்றி சிலாகித்து கூறியிருந்தனர். ஒற்றன் என்ற தலைப்பு எதோ உளவாளியைப் பற்றிய் கதை என்று தோன்றவைக்கின்றது. படித்தபின் தான் தெரிந்தது இது வேறு வகை, அமெரிக்கா சென்று "டகரஜான்" ஆன அசோகமித்திரனின் பயணக்கதை என்று. அவர் இதை புனைகதை என்கின்றார். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல இதுவும் நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்கு அயோவா சிட்டிக்கு சென்று 7 மாதங்கள் தங்கியிருந்த அனுபவங்களை கதையாக்கி தந்துள்ளார். இது நாவல் எனப்படுகின்றது, இந்த வடிவத்தில் நான் படித்த முதல் நாவல் என்பதால் இது எப்படி நாவலகும் என்ற குழப்பம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு அந்தியாயமும் அதனளவில் முழுமையானது. தனியாக எடுத்தால் ஒரு சிறுகதையாகும், முதலிரண்டு அந்தியாயங்களைத் தவிர மற்ற பகுதிகளை வரிசை மாற்றினாலும் வடிவம் கெடாது.

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

புத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.

அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.